For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடைக்காலத்தில் பிரிட்ஜி தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா?

06:25 AM May 06, 2024 IST | Baskar
கோடைக்காலத்தில் பிரிட்ஜி தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா
Advertisement

கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிலர் பிரிட்ஜில் தண்ணீரை வைத்து அதிகமாக குடிப்பார்கள். அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

Advertisement

தற்போது கோடை வெயில் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தினந்தோறும் சதத்தை பதிவு செய்கிறது. மேலும் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் அனைவரும் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம்களையும் நாடுகின்றனர். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிலர், பச்ச தண்ணீரை எடுத்து பிரிட்ஜில் வைத்து, அதை அருந்துகிறார்கள். இதனால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்காது, பல்வேறு பிரச்னைகள்தான் ஏற்படும். அப்படி நாம் பிரிட்ஜி தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செரிமான மண்டல பாதிப்பு: குளிரூட்டப்பட்ட தண்ணீரை அதிகமாக குடிப்பது உடலுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பது செரிமான அமைப்பை பாதிக்கும். குளிர்ந்த நீர் வயிற்றைக் கட்டுப்படுத்துகிறது. எதையாவது சாப்பிட்டால் செரிமானத்தை கடினமாக்குகிறது. குளிர்ந்த நீர் செரிமான அமைப்பை விரைவாக பாதிக்கிறது.

தொண்டையில் தொற்று: குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தொண்டை வலி, சளி-இருமல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி அடிக்கடி மூக்கை அடைக்கும். இதனால் தலைவலியும் ஏற்படலாம். இந்த கோடையில் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பல்வேறு அழற்சி தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே முடிந்தவரை குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.

இதயத் துடிப்பைக் குறைக்கிறது: நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகள் குளிர்ந்த நீரைக் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கிறது என்பதைக் காட்டுகிறது. 10 வது கார்னியல் நரம்பின் செயல்பாட்டிற்கு இது பொறுப்பு. இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் உடலின் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாகும். குளிர்ந்த நீரை அருந்தும்போது, ​​வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு குறைகிறது.

உடல் எடை குறைப்பில் சிரமம்: பிரிட்ஜி தண்ணீரைக் குடிப்பதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது எடை குறைப்பை ஏற்படுத்தாது, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் குளிர்ந்த நீரில் இருந்து விலகி இருப்பது நல்லது.

பல் உணர்திறன்: ரொம்ப குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பல் பிரச்னைகள் ஏற்படும். இதனால் உணவை மெல்லவோ அல்லது சூடான காபி, டீ குடிக்கவோ சிரமமாக உள்ளது. குளிர்ந்த நீர் பற்களின் பற்சிப்பியை அரித்து, அவற்றை அதிக உணர்திறன் கொண்டதாக ஆக்குகிறது. இதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

கோடைக்காலத்தில் தாகத்தை தீர்க்க நார்மல் தண்ணீரையே குடியுங்கள். பிரிட்ஜ் தண்ணீரை தவிர்ப்பது நல்லது.

Read More: ஒரு வேலை மட்டும் பல் துலக்கும் நபரா நீங்க..! மாரடைப்பு ஏற்படும் அபாயம்..! மருத்துவர்கள் சொல்வதென்ன..!

Advertisement