For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிக சர்க்கரை எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆபத்தா? - ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்?

07:55 AM Apr 26, 2024 IST | Baskar
அதிக சர்க்கரை எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆபத்தா    ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்
Advertisement

நாம் அதிகளவில் சர்க்கரை சாப்பிடுவதால் பல உடல்நல அபாயங்கள் ஏற்படும். மேலும் வயதான அறிகுறிகள் விரைவாக வரும். தோலில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் தோன்றலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

சர்க்கரை சாப்பிடுவது என்பது ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து வாயில் வைப்பது மட்டுமில்லை. சர்க்கரையிலான செய்யப்பட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் அது சர்க்கரையை சாப்பிட்டதாக கணக்கிடப்படுகிறது. சர்க்கரை சாப்பிடுவதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். சர்க்கரை உடலுக்கு அதிக கலோரிகளை சேர்க்கிறது. இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு. எந்த அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட உணவும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். இது உடல் நலத்திற்கு சிறிதும் நல்லதல்ல. இதில் எந்த சத்துக்களும் இல்லை. சர்க்கரை சாப்பிடுவது முற்றிலும் தீங்கு விளைவிக்கும், ஆனால் எந்த நன்மையும் இல்லை. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்துவது நல்லது.

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்ற உணவுகளிலும் சர்க்கரை இயற்கையாகவே உள்ளது. கூடுதலாக, ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பற்களும் விரைவாகச் சிதைந்துவிடும். மேலும் உயர் ரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரும். இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

சர்க்கரை பானங்கள் மற்றும் பொருட்கள் நல்ல சுவையாக இருந்தாலும், அவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இவற்றில் சத்துக்கள் எதுவும் இல்லை. அத்தகைய உணவை சாப்பிட வேண்டிய அவசியமில்லை.சர்க்கரைக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது. சர்க்கரையை குறைப்பது எல்லா வகையிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சர்க்கரை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை அதிகரிக்கும். குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், எவ்வளவு சர்க்கரை குறைக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது.

பக்களவிளைவுகள் என்னென்ன? இனிப்புகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எரிச்சல், கோபம் போன்றவை ஏற்படும். மூட் ஸ்விங்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எதிலும் கவனம் செலுத்த முடியாது. சருமமும் வறண்டு, வறண்டு போகும். வயதான அறிகுறிகள் விரைவாக வரும். தோலில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் தோன்றலாம்.தினமும் இனிப்பு மற்றும் சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் இரைப்பை பிரச்சனைகள் வரலாம்.

செரிமான பிரச்சனைகள். மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே சர்க்கரையை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துவது நல்லது. இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வெல்லத்தில் செய்த பொருட்களை சாப்பிடுவது நல்லது. மேலும், தினமும் ஒரு ஸ்பூன் தேன் குடித்து வந்தால், சர்க்கரை சாப்பிடும் ஆசை குறையும்.

Read More: ரூ.29 புதிய பிரீமியம் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ சினிமா…! IPL போட்டி இலவச பார்க்க முடியுமா…?

Advertisement