For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்..!! எச்சரிக்கும் தனியார் வானிலை ஆய்வாளர்..!!

Private meteorologist Pradeep John has informed that southwest monsoon has intensified in Tamil Nadu.
12:53 PM Jul 16, 2024 IST | Chella
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை     இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்     எச்சரிக்கும் தனியார் வானிலை ஆய்வாளர்
Advertisement

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, வால்பாறை, அப்பர் பவானி, சின்னக்கலாறில் மிக பலத்த மழை பெய்துள்ளது. சின்கோனா, சோலையாறு, நீலகிரி மாவட்டம் எமரால்டு உள்பட 5 இடங்களில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும். சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக கிடைத்துள்ளது. 120 நாட்களில் கிடைக்க வேண்டிய மழை, முதல் 40 நாட்களிலேயே கிடைத்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Read More : சிப்பாய் பேயால் வேட்டையாடப்பட்ட இளவரசி..!! அந்த ரூம்ல ஏதோ இருக்கு..!! இருட்டில் நடக்கும் பயங்கர சம்பவம்..!!

Tags :
Advertisement