For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தகாத உறவால் வந்த வினை.! தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட இளைஞர்.! பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு.!

01:13 PM Feb 02, 2024 IST | 1newsnationuser4
தகாத உறவால் வந்த வினை   தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட இளைஞர்   பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு
Advertisement

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் .

Advertisement

அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அடையாளம் காண்பதிலும் சிக்கல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய பசவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement