முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இந்திய வீரர்கள் நல்ல நடிகர்கள்’..!! ’பிக்ஸ் செய்யப்பட்ட மேட்ச்சில் விளையாடுவது போல் நடிப்பு’..!! பிரபல நடிகை பரபரப்பு பதிவு..!!

10:30 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இந்தியா-நியூசிலாந்து போட்டியின் முடிவு பிக்ஸ் செய்யப்பட்டது என்று பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடிய நிலையில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டி பிக்ஸ் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம் சாட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதில் இருந்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய ட்விட்டுகளை ஷின்வாரி பதிவிட்டு வருகிறார்.

அதாவது, "வங்கதேச அணியால் மட்டுமே இந்திய அணிக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்" என்று அவர் போட்ட பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இந்தியர்கள் ஏன் பாகிஸ்தான் வங்களா தேச நட்பைப் பார்த்து இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்? 1971இல் எங்களை உடைத்த போதிலும், இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்டில் நாங்கள் இரு நாடுகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பது அவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை விமர்சித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய அணி வீரர்கள் நல்ல நடிகர்கள். போட்டியில் அவர்கள் வெல்வது பிக்ஸ் செய்யப்பட்ட நிலையிலும் விளையாடுவது போல நடிக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். நடிகை சேஹர் ஷின்வாரியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
இந்தியா - நியூசிலாந்துஇந்தியா வெற்றிபாகிஸ்தான் நடிகைரேஹர் ஷின்வாரி
Advertisement
Next Article