For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குலதெய்வத்திற்கு பிடித்தவற்றை படையல் போட்டால், கெட்ட சக்திகள் ஓடிபோகும்..!

05:45 AM Apr 20, 2024 IST | Baskar
குலதெய்வத்திற்கு பிடித்தவற்றை படையல் போட்டால்  கெட்ட சக்திகள் ஓடிபோகும்
Advertisement

எதிரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க குலதெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும். அனைத்தும் பறந்து போகும்.

Advertisement

இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படுபவர்கள்தான் அதிகம். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் நபர்களின் பிடியில் இருந்து தப்பிக்க குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாது.

தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றத்தை காண எவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.வீட்டு பூஜை அறையில் உள்ள தங்கள் குலதெய்வ படத்தை துடைத்து மாலை அணிவித்து அலங்காரம் செய்யவும்.பிறகு தங்கள் குலதெய்வதிற்கு பிடித்தவற்றை படையல் போடவும்.பிறகு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் போட்டு குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளவும்.தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள்,தரித்திரம்,கெட்ட சக்திகள் நீங்கி நல்லது நடக்க மாதம் ஒருமுறை இவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்து வர வேண்டும்.

Read More: வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி..!! கோவையில் மறு வாக்குப்பதிவு..!! அண்ணாமலை

Advertisement