For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’என் தொடையை யாராவது தொட்டால் அவனுடையதை நான் பிடிப்பேன்’..!! ரேகா நாயர் பளீச் பதில்..!!

04:41 PM Nov 28, 2023 IST | 1newsnationuser6
’என் தொடையை யாராவது தொட்டால் அவனுடையதை நான் பிடிப்பேன்’     ரேகா நாயர் பளீச் பதில்
Advertisement

பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்தார். பின்னர், சன்டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி ஆவார். சித்ராவின் தற்கொலை ரகசியங்கள் குறித்து பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார். பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி மோசமாக பேசியதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசிய ரேகா நாயர், பின்னர் மன்சூர் அலிகானுக்கு நான் சப்போர்ட் பண்ணல. அதுபோன்று நடந்துக் கொள்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

அதே போல், நான் ஆடை சுதந்திரம் பற்றி பேசினது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் கவர்ச்சி உடைகளை அணிந்து வெளியே செல்லும்போது ஒருவன் என் தொடையை தொட்டால், நான் அவன் கழுத்தை பிடிப்பேன். அது தான் பெண் சுதந்திரம். ஆடை அணியாமல் வெளியில் செல்வது பெண் சுந்திரம் இல்லை என விளக்கம் கொடுத்தார்.

Tags :
Advertisement