முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறப்பு’..!! ’டாஸ்மாக் கடைகள் மூடல்’..!! அண்ணாமலை அதிரடி..!!

05:09 PM Jan 26, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று 81-வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், வள்ளலாரின் கொள்கை கருணை மற்றும் வடலூரில் போலீசாரின் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாது.

Advertisement

மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபரபு தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட செய்தியாளரை களங்கப்படுத்தக் கூடாது. உண்மை செய்திகள் வெளியிடுபவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். INDIA - கூட்டணி ஒரு சீட்டுக்கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கும் போதும் ஜோக்கர் போல் ஒரு கட்சி வெளியேறுகிறது. மக்கள் மன நிலைக்கு எதிராக பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

Tags :
அண்ணாமலைகள்ளுக்கடைடாஸ்மாக் கடைகள்பாஜக மாநில தலைவர்
Advertisement
Next Article