முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’விஜய்யின் கட்சிக்கொடியை பறக்கும் போது பார்ப்பேன்’..!! எதிர்பார்ப்பது எல்லாத்தையும் கொடுக்க முடியுமா..? துரைமுருகன் பரபரப்பு பேட்டி..!!

'I will see Vijay's party flag flying'..!! Can you give everything you expect? Duraimurugan sensational interview..!!
03:13 PM Aug 24, 2024 IST | Chella
Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் காவிரி நீரை போராடி தான் பெற்று வருகிறோம். விஜய்யின் கட்சிக்கொடியை பறக்கும் போது பார்ப்பேன் என்று தெரிவித்தார். மேலும், துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, "எதிர்பார்ப்பது எல்லாத்தையும் கொடுக்க முடியுமா?, எதிர்பார்க்காததையும் கொடுக்க முடியும்" என்றார்.

Advertisement

முதல்வர் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டு, நிர்வாகத்தின் தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வார். அதில் நாம் தலையிடக்கூடாது. இந்த ஊரில் மட்டுமின்றி, அனைத்து ஊர்களிலும் ஒரு பழக்கம் உள்ளது. குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்வது இல்லை. குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் எங்கு குப்பை கொட்ட சென்றாலும் அங்கு தடுக்கிறார்கள். என் தொகுதி வந்தால் நான் தடுக்கிறேன் பக்கத்து தொகுதிக்கு போனால் அவர் தடுக்கிறார்.

அதனால் எங்க கொட்டுவது என தெரியவில்லை அவர்களுக்கு. அதனால் ஆறு, ஏரிகள் ஆகியவற்றில் கொட்டி விடுகிறார்கள். சென்னை கூவத்தில் அளவுக்கு அதிகமாக குப்பைகளை கொட்டி உள்ளார்கள். ஏற்கனவே கழிவுநீர் தண்ணீரால் பாலாறு கெட்டி விட்டது என சொல்கிறார்கள். போதா குறைக்கு குப்பை கொட்டி வேற பாழ் படுத்துகிறார்கள்” என பேசியுள்ளார்.

Read More : மின்வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்..!! இனி எல்லாமே செல்போனில் தான்..!! என்ன தெரியுமா..?

Tags :
தமிழக வெற்றிக் கழகம்துரைமுருகன்விஜய்
Advertisement
Next Article