For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’எனக்குத்தான் யாரும் இல்ல’..!! ’ஆனால் தம்பி விஜய்க்காக நான் இருக்கிறேன்’..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!

People who are tired of talking about me are criticizing brother Vijay.
01:10 PM Aug 24, 2024 IST | Chella
’எனக்குத்தான் யாரும் இல்ல’     ’ஆனால் தம்பி விஜய்க்காக நான் இருக்கிறேன்’     சீமான் பரபரப்பு பேட்டி
Advertisement

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது ஸ்பெயின் நாட்டு கொடி போல உள்ளது, ஆப்ரிக்கன் யானை, தூங்கு மூஞ்சி பூ என்று அந்த கொடியை வைத்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் அதை கலாய்த்து வரும் நிலையில், நாம் தமிழர் சீமான் விஜய்யின் நகர்வை பாராட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா? எங்கள் ஊரில் யானை இல்லையா? யானை ஒரு தனி மனிதனுக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதா? எங்கள் கட்சி சின்னத்துக்கு புலியை கேட்டபோது தேர்தல் ஆணையம், 'அது தேசிய விலங்கு' என்றனர். மயிலை கேட்டபோது, 'அது தேசிய பறவை' என்று கூறினர். பிறகு ஏன் பாஜகவுக்கு மட்டும் தேசிய மலரை கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு பதில் இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், என்னை குறித்து பேசி சோர்ந்து போனவர்கள் தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருகின்றன. தனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லை. ஆனால், விஜய்க்காக பேச நான் இருக்கிறேன் என்றார். மேலும், கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தானே அனைத்தையும் கூற முடியாது. செப்.22ஆம் தேதிக்குப் பிறகு விஜய் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் சஸ்பென்ஸ் வைத்தார்.

Read More : விபச்சார புரோக்கரை கடத்திய போலீஸ்காரர்கள்..!! பதறியடித்து வந்த மனைவி..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement