முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து” - கங்கனா ரனாவத்

12:54 PM Apr 08, 2024 IST | Mari Thangam
Advertisement

நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Advertisement

லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கங்கனா ரனாவத். அண்மையில் நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என ஒரு பதிலளித்து ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்தவர் கங்கனா ரனாவத். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை முடிவதற்குள் கங்கனா ரனாவத்தை மையமாக வைத்து மற்றொரு சர்ச்சை வெடித்தது. 2019 லோக்சபா தேர்தலின் போது கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தாம் வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன். எனக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடித்திருந்தது என கூறியிருந்தார். அதனை இப்போது காங்கிரஸ் மீண்டும் நினைவூட்டி விமர்சனம் செய்தது.

இதற்கு விளக்கம் தெரிவித்த கங்கனா, இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து என்பதை அவர்கள் அறிவார்கள். எதுவும் என்னைப் பற்றி அவர்கள் தவறாக நினைக்கும்படி செய்யாது. ஜெய் ஸ்ரீ ராம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
kangana ranaut
Advertisement
Next Article