முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நானும் எவ்வளவு தான் பொறுத்து போக முடியும்’..? குடிபோதையில் மனைவிக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர்..!! கணவன் கொடூர கொலை..!!

02:52 PM Dec 08, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா (40). இவரது மனைவி கனகா (36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி வரட்டாறு தடுப்பணை கால்வாயில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் ராஜா இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக உறவினர்களுடன் சேர்ந்து மனைவி அடக்கம் செய்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக சந்தேகமடைந்த ராஜாவின் தாயார், போலீசில் புகார் அளித்தார். பின்னர், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ராஜா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திடீரென ராஜாவின் மனைவி கனகா அரூர் காவல் நிலையத்திற்கு சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

கடந்த 6 மாதமாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு ராஜா தூங்க விடாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். சம்பத்தன்று போதையில் வந்த ராஜா வலுக்கட்டாயமாக உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு கனகா மறுப்பு தெரிவித்ததால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகா அருகில் இருந்த செங்கலால் ராஜாவை தாக்கி கீழேப் பிடித்து தள்ளியதில் மயங்கியுள்ளார்.

ஆத்திரம் அடங்காத கனகா, ராஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் இழுத்துச் சென்று கனகாவே தள்ளியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, கனகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
காவல்துறைகொலை வழக்குசெக்ஸ்தருமபுரி மாவட்டம்
Advertisement
Next Article