முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனியார் பள்ளியில் நடந்த கோர சம்பவம்..!! 3 மாணவிகளுக்கு மூச்சுப் பேச்சு இல்ல..!! 30-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்..!!

The incident of 3 female students fainting due to a sudden gas leak in a private school operating in Tiruvottiyur, Chennai has created a lot of excitement.
04:32 PM Oct 25, 2024 IST | Chella
Advertisement

சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 3 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வடசென்னையில் வாயு கசிவு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்ணூரில் வாயு கசிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், திடீரென 3 மாணவிகள் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல 35-க்கும் அதிகமான மாணவிகள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக பள்ளிக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், வாயு கசிவுக்கு என்ன காரணம் என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

Read More : மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்..!! அதுவும் தமிழ்நாட்டில் வேலை..!! இந்த தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Tags :
சென்னைதனியார் பள்ளிதிருவொற்றியூர்மாணவிகள்
Advertisement
Next Article