மீண்டும் கோரத்தாண்டவம்..!! புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலி..!! பீதியில் பொதுமக்கள்..!!
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் என வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், சலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும், கொரோனாவின் போது அளிக்கப்பட்ட அதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கை கழுதல், மாஸ்க் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.