Holiday | என்னது பிப்.26ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியாகுமா அறிவிப்பு..?
”சம வேலைக்கு சம ஊதியம்” என்ற தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றக்கோரி கடந்த 5 நாட்களாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை அரசு அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26 முதல் மாநில தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டமும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கைதாகும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை அழைத்துப் பேசி முடிவு செய்யாததை கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களிலும் (முதன்மை கல்வி அலுவலகத்தில்) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
எனவே, போராட்டத்தை இன்னும் தீவிரமாகாமல் தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேசி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
Read More : 1ஆம் தேதி முதல் இனி Gmail வேலை செய்யாது..? பயனர்கள் அதிர்ச்சி..!! கூகுள் நிறுவனம் பரபரப்பு தகவல்..!!