முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”ஏலேய்.. இங்க என்னல பண்ற”..? பெருங்களத்தூரில் அசல்டாக சாலையை கடந்த முதலை..!!

08:47 AM Dec 04, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றோடு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல முக்கிய சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாம்பு, பூச்சிகள் வெளியே வரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது உண்டு. ஆனால், தற்போது முதலை ஒன்று சாலையில் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை பெருங்களத்தூர் - நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. பரபரப்புமிக்க இந்த சாலையில் முதலை அசால்டாக நடந்து செல்வதும், அதனை காரில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். மேலும், அந்த முதலையை கவனிக்காமல் உணவு டெலிவரி ஊழியர் கிராஸ் செய்கிறார். அதிர்ஷடவசத்தால் அந்த ஊழியர் உயிர் தப்பியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Tags :
சென்னைபெருங்களத்தூர்மிக்ஜாம் புயல்முதலை
Advertisement
Next Article