For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகுது”..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

05:58 PM Dec 19, 2023 IST | 1newsnationuser6
”இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகுது”     வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளை கரைபுரண்டோடுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement