For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் புரட்டிப் போட வரும் கனமழை..!! இன்று இந்த மாவட்டங்களுக்கு வார்னிங்..!! வானிலை அலர்ட்..!!

07:14 AM Jan 08, 2024 IST | 1newsnationuser6
மீண்டும் புரட்டிப் போட வரும் கனமழை     இன்று இந்த மாவட்டங்களுக்கு வார்னிங்     வானிலை அலர்ட்
Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Advertisement

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கன மழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 10ஆம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

ஆகையால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement