For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்று முன்..‌.! அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிப்புகளை வெளியிடலாம்...! ஆட்சியர் உத்தரவு.‌..

08:10 AM Nov 22, 2023 IST | 1newsnationuser2
சற்று முன்  ‌   அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை  அறிவிப்புகளை வெளியிடலாம்     ஆட்சியர் உத்தரவு ‌
Advertisement

மழை காலத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் .

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதே போல மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருக்க கூடாது. மாணவர்களின் பாதுகாப்பை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement