முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகி விட்டதா..‌? இன்று முதல் முகாம்...!

Has the insurance policy lapsed without paying the premium amount?
07:22 AM Sep 18, 2024 IST | Vignesh
Advertisement

அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பித்துகொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்களுக்கு அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

இன்று முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அம்பத்தூர் தலைமை தபால் நிலையம், (044-26245545), ஆவடி பாசறை தலைமை தபால் நிலையம் (044-26385093), தாம்பரம் தலைமை தபால் நிலையம் (044-22266204) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் உங்களது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டுள்ளார்.

குறைந்த ஆவணங்களுடன் பாலிசிகளை புதுபிக்கும் வசதியுடன் அஞ்சல்துறை நிபுணர்களின் தனிப்பட்ட வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். பாலிசிகளை புதுப்பிக்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரி்வித்துள்ளார்.

Tags :
Chennaipension schemePOST OFFICEPremium scheme
Advertisement
Next Article