For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கையில் சரக்கு பாட்டிலுடன் திருமண நாள் கொண்டாட்டம்.! ஹன்சிகாவின் புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் சர்ச்சை.!

02:10 PM Dec 05, 2023 IST | 1newsnationuser4
கையில் சரக்கு பாட்டிலுடன் திருமண நாள் கொண்டாட்டம்   ஹன்சிகாவின் புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் சர்ச்சை
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தளபதி விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

Advertisement

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய நெருங்கிய நண்பரான சுஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆடம்பரமான அரண்மனையில் வைத்து நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் ஹன்சிகா. சமீபத்தில் கூட தமிழில் வெளியான பார்ட்னர் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவரது கணவர் சுஹைல் கதூரியா திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகா இவரை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்ய தூண்டியதாகவும் சர்ச்சைகள் எழுந்தது. எனினும் இந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கையை இன்பமாக கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் தங்களது முதல் திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறது இந்த ஜோடி .

இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் ஹன்சிகா. அதில் கையில் பீர் பாட்டில் உடன் கேக் வெட்டி தங்களது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர். மேலும் அவரது கணவர் திருமணநாள் பரிசு வழங்கியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். இவர் கையில் மது பாட்டில் உடன் திருமண நாளை கொண்டாடி இருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
Advertisement