முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலே மாறியிருக்கும்”..!! ரஜினிகாந்த் இரங்கல்..!!

10:14 AM Dec 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் வரிசையாக வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருக்கோவிலூர், மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துள்ளார். அவர் தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவர் ஒரு அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரை கடைசியாக பொதுக்குழுவில் பார்த்த போது எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார். தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
அரசியல் தலைவர்தமிழக அரசியல்தேமுதிக தலைவர்நடிகர் ரஜினிகாந்த்விஜயகாந்த்
Advertisement
Next Article