முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சோசியல் மீடியாவில் வாலிபர்களுடன் பழக்கம்..!! 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்..!! பாய்ந்தது போக்சோ..!!

Being active on social media has made him familiar with some teenagers. eventually,
05:03 PM Oct 18, 2024 IST | Chella
Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த நிலையில், அதன் மூலம் சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், அந்த மாணவியை தங்கள் காம வலையில் விழ வைத்து, அவர்கள் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மாலை சிறுமி வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இரவு முழுவதும் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் காலை, பட்டணம் கிராமம் அருகே சிறுமியை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, 4 வாலிபர்கள் தன்னை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது ஊரல் கிராமத்தை சேர்ந்த தனசேகர் (19), அவரது அண்ணன் திருநாவுக்கரசு (20), முரளி (23), பிரகலாதன் (24) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பண்ணை வீட்டில் 3 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்..!! சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் புகார்..!!

Tags :
13 வயது சிறுமிகூட்டு பலாத்காரம்பள்ளி மாணவிவாலிபர்கள்
Advertisement
Next Article