முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சோசியல் மீடியாவில் பழக்கம்..!! வீட்டிற்கே வந்த 23 வயது இளம்பெண்..!! 68 வயது நபர் செய்த காரியத்தை பாருங்க..!!

On investigation, it was confirmed that the girl had been raped. Immediately, the special forces police arrested Ananda Krishnan who was absconding in Kumuli area of ​​Theni district.
01:32 PM Sep 28, 2024 IST | Chella
Advertisement

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். 68 வயதாகும் பிசியோதெரபிஸ்ட்டான இவருக்கு, சோசியல் மீடியா மூலம் 23 வயது இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் கட்டிடக் கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

Advertisement

அப்போது, ஆனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டி தர வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் ஆனந்த கிருஷ்ணன்.

அந்த இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அவர் மயங்கிவிட்டார். இதையடுத்து, ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனாலும், தைரியத்துடன் அந்த பெண், கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையில், அந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. உடனே, தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ’என் வாழ்க்கைய நாசமாக்கிட்டியே’..!! ’என்ன கல்யாணம் பண்ணிக்க’..!! காதலியுடன் பலமுறை உல்லாசம்..!! கர்ப்பமானதால் எஸ்கேப்..!!

Tags :
காவல்துறைகோவை மாவட்டம்பாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article