முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்..!! நாளை (டிச.27) இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

11:01 AM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

நாளை (புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
உள்ளூர் விடுமுறைகடலூர் மாவட்டம்சிதம்பரம்நடராஜர் கோவில்
Advertisement
Next Article