For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்..!! உரிமைத்தொகை குறித்து வெளியான சூப்பர் அறிவிப்பு..!! இம்மாதம் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..!!

07:30 AM Jan 04, 2024 IST | 1newsnationuser6
குட் நியூஸ்     உரிமைத்தொகை குறித்து வெளியான சூப்பர் அறிவிப்பு     இம்மாதம் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது
Advertisement

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், ரூ.1,000 கிடைக்காதவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த நிலையில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே பணம் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேல்முறையீடு செய்த பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
Advertisement