முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விடுதியில் தங்கியிருக்கும் பெண்களே உஷார்..!! ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞர்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

After seeing the figure of a man through the window of the room, the female students screamed and informed the hostel warden. He immediately reported to the police.
08:57 AM Sep 02, 2024 IST | Chella
Advertisement

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதி அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் பெட்ரிக் என்ற இளைஞர், விடுதியின் ஜன்னல் வழியாக மாணவிகளின் அறையை எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.

Advertisement

அறையின் ஜன்னல் வழியாக ஆண் உருவம் தெரிந்ததை அடுத்து, மாணவிகள் கத்தி கூச்சலிட்டு ஹாஸ்டல் வார்டனிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசார் புகாரளித்தார். அதன்பேரில் பெட்ரிக்கை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலேயே, பெட்ரிக் என்பவர் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த பெட்ரிக் (38), கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஹாஸ்டலில் மாணவிகள் ரூம் ஜன்னலை எட்டிப் பார்த்துள்ளார். மாணவிகள் அப்போதே கத்திக்கூச்சல் போடவும், பெட்ரிக் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதற்கு பிறகுதான், ஹாஸ்டல் வார்டனிடம் அந்த நபரின் அடையாளத்தை மாணவிகள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் பெண்கள் ஹாஸ்டலில் இப்படியான சம்பவங்கள் நடப்பது மாணவிகளையும், பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Read More : ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட பள்ளி மாணவி பலி..? திருச்சியில் அதிர்ச்சி..!!

Tags :
திருப்பத்தூர் மாவட்டம்பெண்கள்
Advertisement
Next Article