For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Chennai: கேலோ இந்தியா திறனறியும் போட்டி இன்று தொடக்கம்...!

10:20 AM Apr 22, 2024 IST | Vignesh
chennai  கேலோ இந்தியா திறனறியும் போட்டி இன்று தொடக்கம்
Advertisement

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறவுள்ளது.

Advertisement

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்துகிறது. இன்று சைனி வில்சன் தலைமை விருந்தினராக இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

இன்று தடகளம், 23-ம் தேதி குத்துச்சண்டை, 24-ம் தேதி வாலிபால், 25-ம் தேதி கால்பந்து, 26-ம் தேதி கபடி, 27-ம் தேதி கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெறும். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலை 7 மணி முதல் விளையாட்டுகள் தொடங்கும். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்தி, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://mybharat.gov.in/ என்ற தளத்தை அணுகவும்.

Tags :
Advertisement