For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரவுடியுடன் உல்லாசம்..!! கணவனை தீர்த்துக் கட்டிய கள்ளக்காதலன்..!! வீடு புகுந்து வேலையை காட்டிய கள்ளக்காதலி..!! பரபரப்பு சம்பவம்..!!

The police arrested the blackmailer who broke into the house and cut three people with a sickle to avenge the murder of her romantic husband.
08:44 AM Oct 04, 2024 IST | Chella
ரவுடியுடன் உல்லாசம்     கணவனை தீர்த்துக் கட்டிய கள்ளக்காதலன்     வீடு புகுந்து வேலையை காட்டிய கள்ளக்காதலி     பரபரப்பு சம்பவம்
Advertisement

காதல் கணவனை கொலை செய்த கள்ளக்காதலனை பழிதீர்க்க வீடு புகுந்து 3 பேரை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவர், பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரும், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், புழல் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

இதை தட்டிக் கேட்ட லட்சுமணனை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஜூன் 23ஆம் தேதி விஷ்ணு படுகொலை செய்தார். இந்த வழக்கில் விஷ்ணு, தம்பி விஷால் உட்பட 5 பேரை கைது செய்த மீஞ்சூர் போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணு, விஷால் ஆகியோரின் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல், அந்த வீட்டில் இருந்த மூவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதில் விஷ்ணுவின் தந்தை ரகு (48), தாய் ஜெயபாரதி (42), விஷாலின் மனைவி அர்ச்சனா (21) ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லஷ்மணன் மனைவி ரம்யா தமது காதல் கணவனை கொலை செய்த கள்ளக்காதலன் விஷ்ணுவை பழி தீர்ப்பதற்காக கணவனின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் ரம்யா சென்றுள்ளார்.

கள்ளக்காதலன் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற ரம்யா, தான் ஒரு பெண் காவலர் எனவும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். காவலர் என கூறியதால் வீட்டின் கதவை திறந்துள்ளனர். அப்போது, ரம்யாவுடன் வந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது பெட்ரோல் ஊற்றி அவர்களது நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டில் இருந்த மூவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீஞ்சூர் போலீசார் ரம்யா (24), மாரன்ராஜ் (29), திருப்பதி (22) ஆகிய மூவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

Read More : பிஎம் கிசான் திட்டம்..!! நாளை வங்கிக் கணக்கிற்கு வருகிறது ரூ.2,000..!! விவசாயிகள் செம ஹேப்பி..!!

Tags :
Advertisement