முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறுமியுடன் அடிக்கடி உல்லாசம்..!! வீடியோ எடுத்த காதலன்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை..!!

The murder of a 14-year-old girl who took a video while having fun has caused a shock.
06:56 PM Jul 04, 2024 IST | Chella
Advertisement

14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் திருப்பூரில் உள்ள கனகம்பாளையம் என்ற இடத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் புவனேஸ்வரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர், தனது 14 வயது காதலியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோக்களை பயன்படுத்தி அவரது நண்பரான தமிழரசன் என்பவர் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு 15,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார், இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். மேலும், பணம் கேட்டு மிரட்டிய தமிழரசனை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், புவனேஸ்வரன் சிறுமியுடன் காதலைத் தொடர்ந்து இருக்கிறார். மேலும், சிறுமியை அடிக்கடி அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை புவனேஸ்வரனின் நண்பன் தமிழரசனை அழைத்து அதிக பணம் தருவதாக கூறி புவனேஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இவர்களது திட்டத்தின் படி தமிழரசன், புவனேஸ்வரனை மது அருந்துவதாக கூறி அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய தமிழரசன் மற்றும் சிறுமியின் தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : கைலாசா எங்கு இருக்கிறது..? நீங்களும் வரலாம்..? உடனே புக் பண்ணுங்க..!! இடத்தை அறிவிக்கும் நித்தியானந்தா..!!

Tags :
14 வயது சிறுமிcrimemurderPolice
Advertisement
Next Article