முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பார்ட்டிக்கு போகலாம் வரியா".? இளம் மாணவிக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்புணர்வு.! 4 இளைஞர்கள் கைது.!

01:11 PM Nov 30, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பிறந்தநாள் கொண்டாட்டம் எனக் கூறி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதாக கூறி மாணவியை அழைத்து இருக்கின்றனர். அவர்களது பேச்சை நம்பி அந்த மாணவியும் அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்று இருக்கிறார். அங்கு சென்ற பின்பு தான் அவர்கள் கூறியது பொய் என மாணவிக்கு தெரிந்திருக்கிறது.

அப்போது அவர்களிடமிருந்து தப்பியோட முயற்சித்து இருக்கிறார் அந்த மாணவி. எனினும் அந்த நான்கு இளைஞர்களும் மாணவியை கட்டி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் அந்த கொடூர காட்சிகளையும் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியே கூறினால் இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
4 youtharrestkanyakumariPolicesexual assault
Advertisement
Next Article