முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி இந்த திட்டத்திற்கு கூடுதல் பணம் கிடைக்கும்..!! மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

A family cover of Rs 5 lakh per annum will now be increased to Rs 10 lakh.
12:54 PM Jul 09, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையின் பலனைப் பெற்று வந்தனர். தற்போது இத்திட்டத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் வகையில், இத்திட்டத்தின் தொகையை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு இருக்கும் நிலையில், இப்போது அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

Advertisement

இந்த காரணத்திற்காக, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு 3 ஆண்டுகளுக்குள் எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். நாட்டில் இதுபோன்று சுமார் 5 கோடி பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்ற விதி இருந்தது.

விண்ணப்பிப்பது எப்படி..? இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு மத்திய அரசு ஆயுஷ்மான் கார்டு வழங்கும். இது ஆதார் அட்டை போன்றது. பயனாளியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று ஒரு வருடத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். அதை இரட்டிப்பாக்கினால் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும். ஆனால் இதில் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உள்ளது. இத்திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படவில்லை.

எனவே, எந்தெந்த மருத்துவமனைகள் செல்லுபடியாகும் என்பதை சரிபார்த்து, அந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த மருத்துவமனைகளின் பட்டியலை ஆயுஷ்மான் பாரதின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://hospitals.pmjay.gov.in/Search/empnlWorkFlow.htm?actionFlag=ViewRegisteredHosptlsNew) காணலாம். 2021ஆம் ஆண்டில் NITI ஆயோக் அறிக்கையின்படி, 30 சதவீதத்திற்கும் அதிகமான நடுத்தர வர்க்க மக்கள் மருத்துவக் காப்பீட்டின் கீழ் இல்லை. அவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதனால்தான் பலனை இரட்டிப்பாக்க மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தூங்க போகும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
பிரதமர் மோடிமத்திய அரசு
Advertisement
Next Article