நீட்டிக்கப்படும் ரெட் அலர்ட்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை..? வானிலை மையம் வார்னிங்..!!
07:17 AM Dec 19, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Article