For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்பானத்தில் மது..!! +1 மாணவியை ஆக்கிரமித்த போதை..!! பலாத்காரம் செய்ய முயன்றபோது திடீர் வலிப்பு..!! சேலத்தில் பயங்கரம்..!!

Govindaswamy took the student to the forest area and tried to rape her by pouring alcohol into her soft drink.
06:41 PM Oct 05, 2024 IST | Chella
குளிர்பானத்தில் மது      1 மாணவியை ஆக்கிரமித்த போதை     பலாத்காரம் செய்ய முயன்றபோது திடீர் வலிப்பு     சேலத்தில் பயங்கரம்
Advertisement

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் பிளஸ் 1 மாணவி, மயங்க நிலையிலும் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் கிடந்தார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, மாணவி மது போதையில் இருந்துள்ளார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதனால், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

Advertisement

இதையடுத்து, கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி அதிக போதையில் இருந்ததால், அவரால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. அதேநேரம், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், மாணவியை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், ராமன்குட்டையை சேர்ந்த கோவிந்தசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த மாணவி, அதே பகுதியில் உள்ள மற்றொரு இரும்பு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இதனால், மாணவிக்கும் கோவிந்தசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோவிந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியை கோவிந்தசாமி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். மாணவிக்கு போதை ஏறியதும், இதை சாதகமாக்கிக் கொண்ட கோவிந்தசாமி அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பயந்துபோன கோவிந்தசாமி, உடனடியாக மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அழகாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பிறகே அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

Read More : சிறையில் இருந்து வெளிவந்ததும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்த சிறுமிகள்..? இன்னும் பல உயிர்களுக்கு சேவை செய்வோம் என உறுதி..!!

Tags :
Advertisement