For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’உடம்பை நல்லா தான வெச்சிருக்கீங்க’..!! ’வேலைக்கு போய் சம்பாதிக்குறது’..!! பிரேமலதாவிடம் வாங்கிக் கட்டிய பிரபல நடிகை..!!

Vasuki has said that you have now rebuked this situation because you have spoken about a lot of political leaders unnecessarily.
06:33 PM Sep 21, 2024 IST | Chella
’உடம்பை நல்லா தான வெச்சிருக்கீங்க’     ’வேலைக்கு போய் சம்பாதிக்குறது’     பிரேமலதாவிடம் வாங்கிக் கட்டிய பிரபல நடிகை
Advertisement

மறைந்தாலும் கூட அவரது பெயர் ஓங்கி நிலைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தியது கேப்டன் விஜயகாந்திற்கு தான். விஜயகாந்த் மறைந்து 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இன்று வரை அவரைப் பற்றி யாராவது ஒருவர் எங்கோ ஒரு மூலையில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொடுத்து சிவந்த கரங்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதற்கு உண்மையான உதாரணம் கேப்டன் தான்.

Advertisement

உதவி கேட்டு வருபவர்களுக்கு முடியாது என்று சொன்ன நாள் கிடையாது. அவர் உதவி செய்த எத்தனையோ நபர்கள், அவருடைய அரசியல் வீழ்ச்சியின் போது அவருடன் நிற்கவில்லை என்பது பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கோவம் தான். பிரேமலதா போல் அவ்வளவு எளிதில் கரையக்கூடியவர் கிடையாது. ஒரு விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கக் கூடியவர். அவரிடம் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் சிக்கி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. செந்தில், கவுண்டமணி காமெடிகளின் மூலம் பிரபலமான நடிகை வாசுகி தான்.

டீச்சர் போல் நடித்து கவுண்டமணியை ஏமாற்றி கடைசியில் அவர் பிச்சை எடுப்பவர் என்று தெரிந்து கவுண்டமணி கொந்தளிக்கும் காமெடியை இன்று வரை மறக்க முடியாது. வாசுகி திரையுலகை தாண்டி அரசியல் மேடை பலவற்றிலும் தன் முகத்தை காட்டி இருக்கிறார். ஒரு கட்சியின் சார்பாக பேச வேண்டும் என காசு வாங்கிவிட்டார் என்றால், எதிர் தரப்பில் இருப்பவர்களை தரைமட்டமாக பேசி விடுவார். கடந்த சில மாதங்களுக்கு முன் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை பற்றி இவர் பேசிய வீடியோக்கள் படு வைரலானது.

விஜயகாந்த் மறைந்தபோது தான் சொந்த ஊரிலிருந்து 3,000 ரூபாய் கடன் வாங்கி வந்து அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதாகவும், ரொம்பவும் கதறி அழுததாகவும் சொல்லி இருக்கிறார் வாசுகி. பின்னர் வாசுகி விஜயகாந்த் வீட்டிற்கும் சென்றிருக்கிறார். அங்கு விஜயகாந்தின் மகன்கள் மற்றும் மனைவி அவரை நல்ல முறையில் உபசரித்துள்ளனர். பின்னர் பிரேமலதா வாசுகியிடம் உடம்பு நல்லா பிட்டா தானே வச்சிருக்கீங்க. எங்கேயாச்சும் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம். தேவையில்லாமல் நிறைய அரசியல் தலைவர்களை பற்றி நீங்கள் பேசியதால்தான் உங்களுக்கு இப்போது இந்த நிலைமை என கடிந்து கொண்டதாக வாசுகி கூறியுள்ளார்.

Read More : தவறாக பயன்படுத்தப்படும் ஆதார் எண்கள்..!! உங்களுக்கும் சந்தேகம் இருக்கா..? உடனே செக் பண்ணுங்க..!!

Tags :
Advertisement