For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடலூரில் பரபரப்பு..! பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு... 4 பேர் கைது...!

Ex-pmk leader cut with sickle... 4 people arrested
10:22 AM Jul 07, 2024 IST | Vignesh
கடலூரில் பரபரப்பு    பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு    4 பேர் கைது
Advertisement

கடலூரில் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாமக முன்னாள் நிர்வாக சங்கரை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர்‌. கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாமகவில் உள்ளார். கடலூர் நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவர். இவர் நேற்று பிற்பகல் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இருச்சகர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சங்கரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சதீஷ், முகிலன், ராஜ்கிரண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement