முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!! நவம்பர் 7ஆம் தேதியே கடைசி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Employment in ration shops..!! November 7th is the last..!! Notification released by Tamil Nadu Govt..!!
10:55 AM Oct 08, 2024 IST | Chella
Advertisement

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7ஆம் தேதிக்குள் முடித்து, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பா் 7ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்து, தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் 3-வது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளாா்.

Read More : ”இருக்கிற இடமே தெரியாமல் போன மாநில கட்சி”..!! ஹரியானாவில் சீரும் பாஜக – காங்கிரஸ்..!! யார் முன்னிலை..?

Tags :
ரேஷன் கடைகள்விற்பனையாளர்வேலைவாய்ப்பு அறிவிப்பு
Advertisement
Next Article