முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! தமிழில் எழுத படிக்க தெரியுமா..? சம்பளம் எவ்வளவு..?

Applications are invited from persons belonging to Hindu religion for filling up the vacant posts of Odhuvar, Parisarakar and Swayambaki in Sri Muthukumaraswamy Devasthanam.
12:20 PM Jul 08, 2024 IST | Chella
Advertisement

ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் காலியாகவுள்ள ஓதுவார், பரிசாரகர் மற்றும் சுயம்பாகி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

ஓதுவார்

ஊதியம் : மாதம் ரூ.11,600
காலியிடம் : 01

கல்வி தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய, அரசு, பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலை அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேவாரம் இசையுடன் பாட தெரிந்திருக்க வேண்டும்.

பரிசாரகர்

ஊதியம் : மாதம் ரூ.13,200
காலியிடம் : 01

கல்வி தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சுயம்பாகி

ஊதியம் : மாதம் ரூ.13,200
காலியிடம் : 01

வயது வரம்பு : 2024 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும், 45 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி..?

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்.
எண்.44, இராசப்ப செட்டி தெரு,
பூங்காநகர்,
சென்னை-3

விண்ணப்பங்களை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 2.08.2024 மாலை 5.45 மணி

Read More : ’அழுகிப் போன மரங்கள் தான் உணவு’..!! கோடிகளில் விற்கப்படும் வண்டு..!! வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்..!!

Tags :
இந்து சமய அறநிலையத்துறைவேலைவாய்ப்பு
Advertisement
Next Article