முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

8 முதல் 10 வயது.! 13 மாணவிகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை.! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 வயது ஆசிரியர்.!

01:26 PM Dec 05, 2023 IST | 1newsnationuser4
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 36 வயதான கருணாகரன். இவர் அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. குறிப்பாக மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 13 மாணவிகளை தேர்ந்தெடுத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஆசிரியருக்கு பயந்த மாணவிகளும் இது தொடர்பாக தங்களது பெற்றோரிடம் எந்த புகாரும் தெரிவிக்காமல் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் ஒரு சில மாணவிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அவர்களது பெற்றோர் மாணவிகளை விசாரித்துள்ளனர். அப்போது ஆசிரியர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நாடி உள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்து இருக்கிறது. அவர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
Elementary schoolFemale studentspocsoteachervilupuram
Advertisement
Next Article