For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ADMK: "6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல்; சேலத்து சிங்கம் எடப்பாடியார் தான் அடுத்த முதல்வர்"- தமிழ் மகன் உசேன் பரபரப்பு பேட்டி.!

06:26 PM Feb 26, 2024 IST | Mohisha
admk   6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல்  சேலத்து சிங்கம் எடப்பாடியார் தான் அடுத்த முதல்வர்   தமிழ் மகன் உசேன் பரபரப்பு பேட்டி
Advertisement

ADMK: 6 முதல் 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் மகன் உசேன் மீண்டும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என தெரிவித்துள்ளார்.

Advertisement

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் எஸ்.எம் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கட்சி தான் தனது உயிர் மூச்சு எனக்கு தெரிவித்து இருக்கிறார். அதிமுக தொடர்பான வழக்கில் தனக்கு 5 கோடி ரூபாய் கொடுத்து நீதிமன்றத்தில் கையெழுத்து இட வேண்டாம் என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறினார். அப்போது அந்த ஐந்து கோடி ரூபாயை திருப்பி அனுப்பியதாக தெரிவித்த அவர் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அப்போது தனக்கு பாதுகாப்பாக ரூம் ஏற்பாடு செய்து கொடுத்து பாதுகாவலர்களையும் எடப்பாடி பழனிச்சாமி நியமித்ததாக தெரிவித்திருக்கிறார் தமிழ் மகன் உசேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர் தனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 6 முதல் 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

அந்தத் தேர்தலில் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வெற்றிவாகை சூடுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் . மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கடந்த முறை அரக்கோணம் தொகுதியில் ஒரு நல்லவரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். அவர் கோடி கோடியாக சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த முறையாவது மக்களுக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள். ஜாதி மத பேதம் பார்க்காமல் நல்ல மனிதருக்கு வாக்களியுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

English Summary: ADMK senior member Tamil magan Hussain guess that the state election may comes in 6 months and edappadi palanisamy will be CM again.

Advertisement