For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்..!! உஷாரா இருங்க மக்களே..!!

It is said that we can find the financial crisis coming at home through some signs. Let's see what they are in this post.
05:00 AM Sep 28, 2024 IST | Chella
வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்     உஷாரா இருங்க மக்களே
Advertisement

வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர். அப்படி நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கிவிட்டதை எப்படி கண்டுகொள்ளலாம் என சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.

துளசி செடி : பொதுவாக துளசி செடியை பலர் வீடுகளில் வைத்திருப்பார்கள். ஆனால், துளசி செடி உங்கள் கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது, துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக அர்த்தம். அதனால், துளசி செடி வாடினால் உங்களுக்கான கெட்ட காலத்தை உணர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.

கண்ணாடி உடைதல் : வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது. சாணக்கியர் கூற்றுபடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும்.

தினசரி சண்டை : உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார். இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும்.

பெரியோரை அவமதிப்பது : சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார். மேலும், வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் தான் எப்போதும் உங்களை பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பூஜை இல்லாத வீடு : வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட சாணக்கியர் கூற்றுப்படி தவறாமல் பூஜை செய்ய வேண்டும். தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார். பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட சகுணத்தை உணர்த்துவதாகும்.

Read More : ’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!

Tags :
Advertisement