For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கன்னியாகுமரி: "60 வயது தாய் துடிதுடிக்க எரித்துக் கொலை.." போதை மகன் வெறி செயல்.!

06:18 PM Jan 27, 2024 IST | 1newsnationuser7
கன்னியாகுமரி   60 வயது தாய் துடிதுடிக்க எரித்துக் கொலை    போதை மகன் வெறி செயல்
Advertisement

கேரள மாநில எல்லைப் பகுதியைச் சேர்ந்த களியக்காவிளையில் மகன் தாயை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த வெள்ளறடை, காற்றாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நளினி(60). இவரது மகன் மோசஸ். மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான மோசஸ் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மேலும் இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகளும் நிலுவையில் உள்ளது

இந்நிலையில் மோசஸ் மற்றும் அவரது தாய் நளினி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் போதைக்கு அடிமையான மோசஸ் தனது தாய் நளினியை கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவரது தாய் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை கொலை நடந்த இடத்திற்கு வந்து இறந்த நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி மோசஸை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement