முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை: மே 1-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு...! முழு விவரம்...

06:10 AM Apr 29, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் நெம்மேலி உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால் தென் சென்னையின் பல பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். நகரில் உள்ள மூன்று மண்டலங்களில் உள்ள 21 பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

திருவான்மியூர், கொரட்டூர் தோட்டம், கொட்டிவாக்கம், பல்லவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட மூன்று மண்டலங்களான அடையாறு, பெருங்குடி, சோளிங்கநல்லூர் மண்டலங்கள் (மண்டலம் 13, 14 மற்றும் 15) குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் குடியிருப்பு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மே 1ம் தேதி காலை 9 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய அளவு குடிநீரை சேமித்து வைக்குமாறு பெருநகர குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசர காலங்களில், குடியிருப்பாளர்கள் தண்ணீர் தேவைப்பட்டால் https://cmwssh.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து தண்ணீரைக் கோரலாம். மக்கள் குறைகள் இருப்பின் 044 - 45674567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
Next Article