For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.6,000 பெற உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையா..? கவலை வேண்டாம்..!! இந்த ஆதாரம் இருக்கா..?

07:28 AM Dec 12, 2023 IST | 1newsnationuser6
ரூ 6 000 பெற உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையா    கவலை வேண்டாம்     இந்த ஆதாரம் இருக்கா
Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசு பல்வேறு மீட்புப் பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement

இந்த தொகை எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தற்போது அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.

அதை தொடர்ந்து ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும். மேலும், சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement