முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"Lok Sabha தேர்தல் தேதி அறிவித்த பின் இதை மட்டும் செய்யாதீங்க"..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

07:16 AM Mar 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் தேதியிட்டு அறிவிப்பு அரசாணை வெளியானதால் சர்ச்சை வெடித்தது. துறைகளின் செயலர்கள் அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.

ஒரு கோடிட்டு முடிப்பதை நகல் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். கோடிட்டு முடித்த அரசாணை நகலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாக அனுப்ப வேண்டும்” என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Read More : Helmet | இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..? போக்குவரத்துத்துறை அதிரடி..!! வெளியான அறிவிப்பு..!!

Advertisement
Next Article