For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையில் தூங்கி எழுந்தவுடனே மந்தமாக உள்ளதா..? தவறாமல் இதை ஃபாலோ பண்ணுங்க..!!

11:19 AM Dec 26, 2023 IST | 1newsnationuser6
காலையில் தூங்கி எழுந்தவுடனே மந்தமாக உள்ளதா    தவறாமல் இதை ஃபாலோ பண்ணுங்க
Advertisement

பரபரப்பான வாழ்க்கையில் சிலர் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். பலர் இரவும் பகலும் உழைக்கின்றனர். நேரத்திற்கு சாப்பிடவோ, தூங்கவோ நேரமில்லை. இந்த தொடர் வேலையால் உடல் சோர்வடைகிறது. உறக்கம், உணவு இல்லாமல் மணிக்கணக்கில் வேலை செய்தால் கடுமையான நோய்களுக்கு ஆளாக நேரிடும். மருத்துவரின் ஆலோசனையை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றும் பலனில்லை.

Advertisement

இன்றைய காலத்தில் இளைஞர்களும், பெண்களும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். உடலில் இரும்புச்சத்து குறைபாடு சோர்வு மற்றும் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். காலையில் எழுந்ததும் உடல் சோர்வு, செல்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாசம் சரியாக நடக்காது. இந்த அறிகுறிகள் தோன்றினால், முதலில் மருத்துவரிடம் சென்று தேவையான சில ரத்தப் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்து குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் சோர்வு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கும். மாரடைப்பு போன்ற சிக்கல்களும் ஏற்படலாம். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மீன், இறைச்சி மற்றும் முட்டைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். மேலும், கீரையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tags :
Advertisement