டீ குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுறீங்களா.? அப்போ இது உங்களுக்கு தான்.!
பொதுவாகவே டீ குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். அதிலும் சிலருக்கு டியோடு சேர்த்து ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பெரும்பாலானவர்கள் இதற்கு பிஸ்கட்டை பயன்படுத்துவார்கள். டீயோடு பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன தீங்கு ஏற்படுகிறது என பார்ப்போம்.
பிஸ்கட் பொதுவாக தயாரிக்கப்படுகிறது. ரீஃபைண்ட் மற்றும் பட்டர் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இது காஃபீனுடன் சேரும்போது கெட்ட கொழுப்பாக மாறி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் கார்டு நோய்களுக்கும் இது காரணமாக அமைகிறது
அதிலும் குறிப்பாக உப்பு கலந்த சால்ட் கிராக்கர்கள் சாப்பிடுபவர்களுக்கு தான் ஆபத்து அதிகம். இது உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. பிஸ்கட்டில் பொய்க்காக சேர்க்கப்படும் சர்க்கரையும் தேநீரில் இருக்கும் சர்க்கரையும் சேரும்போது நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோய் ஏற்படும் காரணமாக அமையும்.
தினமும் பிஸ்கட்டுகள் டீயுடன் சாப்பிடும்போது அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை ஏற்படவும் காரணமாக அமைகின்றன. பிஸ்கட் தயாரிக்க பயன்படக்கூடிய ரீபைண்ட் ஆயில் மற்றும் டால்டா முகப்பருக்கள் வருவதற்கும் காரணமாக அமைகிறது. சில நேரம் இவை அஜீரணக் கோளாறு உருவாக்கவும் முக்கிய காரணமாக செயல்படுகிறது.