வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பூஜை செய்து பாருங்கள்..!! வீட்டில் பணம் கொட்டும்..!!
அனைவருக்கும் நகை, பணம், சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால். சிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும். செல்வ செழிப்போடு வாழ வேண்டுமென்றால், பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல. இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு என்ற ஞானிகளின் கருத்துப்படி கடுமையாக முயற்சி செய்து தங்களின் பணக்கார கனவை அடைய உழைக்க வேண்டும். அதனோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதன் மூலம் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை விரைவில் மெய்யாகும்.
செல்வ செழிப்புடன் வாழ செய்ய வேண்டிய பரிகாரம் :
* வியாழன் கிழமை அன்று உங்கள் வீட்டு நிலைவாசல் தூண் மற்றும் கதவை பன்னீர் கொண்டு துடைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் 4 கட்டி சந்தனம் மற்றும் பன்னீர் சேர்த்து குழைத்து நிலவசால் தூண் மற்றும் கதவு முழுவதும் பூசி விட வேண்டும்.
* பிறகு நிலவசால் கதவின் நான்கு பக்கமும் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து, செவ்வரளி பூவை மாலையாக கோர்த்து நிலவசலில் கட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும்.
* இவ்வாறு நிலவாசலை வணங்க வேண்டும். காரணம், நிலவசால் வழியாக தான் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவார்.
* அப்படி இருக்கையில், நிலைவாசலுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டால், லட்சுமி தாயாரின் மனம் குளிர்ந்து செல்வத்தை வாரி வழங்குவார்.
* இதனால் உங்களின் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற கனவு விரைவில் நிறைவேறும்.
Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!