முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! போலி மருத்துவரின் கிளினிக்கை திறந்து வைத்த திமுக எம்.பி ஆ.ராசா...!

06:55 AM Apr 13, 2024 IST | Vignesh
Advertisement

மேட்டுப்பாளையத்தில் போலி மருத்துவரின் கிளினிக்கை ஆ.ராசா திறந்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் ஏதும் செயல்படுகிறதா..? என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே.என்ற பெயரில் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள டாக்டர் பெயர் மனோஜ் பிரபு என்றும், அவரது மருத்துவ அங்கீகார படிப்பு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், அரசுமருத் துவமனையில் பணியாற்றும் மனோஜ்குமார் என்பவரின் மருத்துவ பதிவு எண்ணை பயன்படுத்தி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரமடை, கணுவாபாளையம் பகுதியில் உள்ள ஜே.ஜே கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த ஜெயஜோதி என்பவர் போலி மருத்துவர் என விசாரணையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா-வால் திறந்து வைக்கப்பட்டதாகும். போலி மருத்துவர் ஒருவரின் மருத்துவமனையை தொகுதி எம்.பி., ஒருவரே நேரில் வந்து திறந்து வைத்த சம்பவம் நீலகிரி தொகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
a rajaDmkFake clinic
Advertisement
Next Article