For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சர்க்கரை நோயாளிகள் இதை மட்டும் தினம் சாப்பிடுங்க!! ஒருவாரத்தில் குட் ரிசல்ட்!!

06:00 AM May 31, 2024 IST | Baskar
சர்க்கரை நோயாளிகள் இதை மட்டும் தினம் சாப்பிடுங்க   ஒருவாரத்தில் குட் ரிசல்ட்
Advertisement

நீங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விரும்பினால் தினமும் பலா மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டால் உங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

Advertisement

தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக மக்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நோய் இளைஞர்களை அதிகம் தாக்குகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் உணவுப் பிரச்னைகள்தான். இதனால், உடலில் பல நோய்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. நீங்கள் நீரிழிவு நோயைத் தவிர்க்க அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் உணவை மாற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். மேலும் மருத்துவரை அணுகுவதும் அவசியம். அதிலும் வீட்டு வைத்தியம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டாலும் கூட உங்கள் உணவு முறையை மாற்ற வேண்டும். நீரிழிவு நோயாளிகள் கோதுமைக்கு பதிலாக, பலா மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. பச்சைப் பலா மாவைக் கொண்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் நீக்குகிறது. பலா மாவு என்றால் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் பலா மாவு:

பச்சை பலாப்பழ மாவு ரொட்டியை தினமும் சாப்பிட்டு வந்தால், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகளின் பிளாஸ்மா சர்க்கரை அளவைக் குறைக்க பலா மாவு உதவுகிறது. பலா மாவைப் பயன்படுத்துபவர்களின் உடலில் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ய

ஆய்வுகள் சொல்வது என்ன?

அமெரிக்க நீரிழிவு சங்கத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட சுமார் 40 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு 12 வாரங்களுக்கு பச்சை பலா மாவு மற்றும் மற்றொரு குழுவில் உள்ளவர்களுக்கு சாதாரண மாவு வழங்கப்பட்டது. பலாப்பழம் மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டவர்களின் குழுவில் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. பலாப்பழம் பயன்படுத்துபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாகக் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பலா மாவில் உள்ள நன்மைகள்:

1)பலாப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பிரட் (ரொட்டி) சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு போன்ற ஆபத்தான நோயைக் கட்டுப்படுத்தலாம்.

2)பலாப்பழம் சாப்பிடுவதால், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

3)பலா மாவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உயர் ரத்த அழுத்த பிரச்னையையும் கட்டுப்படுத்துகிறது.

4) பலா மாவு ரொட்டி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5) பலா மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருக்கும்.

பலா மாவு தயார் செய்வது எப்படி?

பலாப்பழம் இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பலாப்பழ விதைகளை உலர வைக்கவும். உலர்த்திய பின், மேல் அடுக்கை அகற்றி, பலாப்பழத்தின் விதைகளை சிறிய துண்டுகளாக வெட்டவும். இப்போது இந்த விதைகளை அரைத்தால் மாவு தயாராகிவிடும்.

Read More: “மாப்ள.. உங்க அழகுமணி வந்திருக்கு நிமிர்ந்து பாருங்க..” அந்த அழகுமணி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Tags :
Advertisement